Saturday, January 12, 2008


வலைல பதிவ போட்டு சும்மா தூள் கிளப்புற எல்லோருக்கும் வணக்கம்ங்ணா...தமி'ள' காப்பாத்தற குருப்புல என்னையும் கொஞ்சம் சேத்துக்கங்ணா...நானும் எல்லாரையும் போல நல்லா மொக்க போட்டு நம்ம குலப்பெருமய(!) கொஞ்சங்கூட கூடக்கொறயாம பாத்துக்கறங்ணா...

என்னா திடீருனுன்னு...? கேக்கறீங்க..புறியுது...எல்லாம் கடந்த நாளஞ்சு நாளாத்தென்... படுத்தா தூங்க முடியல எந்திரிச்சா ஒக்கார முடியல...ஏதாவது மூலங்கீலமா இருக்குமுனு நெனக்காதிக...எல்லா நம்ப பதிவுக செஞ்ச வேலைதேன்...அத்தினி மொக்க பதிவயும் படிச்சிபுட்டு த்தான் இத்தன பாடும்..

கடசீல... நேத்து ராத்திரி... யம்மா... அடச்சி அது இல்லீங்க... நேத்து அர்த்த ராத்திரியில(அர்த்த ராத்திரி என்பது எங்க பாஷையில் காலை 5மணி,அதிகாலை என்பது முற்பகல் 11ண்ணு இல்லை 12மணி என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்)கண்ட கனவுதான் இத்தன ரவுசுக்கும் காரணமுங்ணா...

அப்புறம் நமக்கு ஊரு எதுனு கேக்கறீங்களா...?பொறந்தது புதுகோட்டைங்ணா... தவழ்ந்தது நடந்தது எல்லாம் கோயமுத்தூர்ன்ங்க்ணா...ஓடினது மட்டும் வெளிநாட்டுக்குங்ணா...

நெறய சேதி இருக்குதுங்ணா சொல்லறதுக்கு...வர்ர வாரத்திலிருந்து எல்லாத்தியும் சொல்றங்ணா...

"நான் வந்த பாதை,வரும் பாதை மற்றும் வரப்போகும் பாதைகள் பற்றிய என் பதிவுகளின்றி வேறொன்றுமில்லை பராபரமே"...

அப்புறம் வர்ரணுங்ணா...
பின்குறிப்பு: போட்டோல பாருங்க இனி என்னவெல்லாம் வலப்பதிவுல நடக்கப்போவுதோங்கிற பெருங்கவலைல திரும்பி உக்காந்துட்டிருக்கிற ரெண்டுபேர பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க...ஆனா ப்ரம்ம புடிச்சமாதிரி அதே கவலைல ஒருத்தர் உக்காந்துட்டு இருக்காரே அவரு என்னுடைய சக பொறியாளர்.

No comments: